வண்ணம் இல்லை!
அதன்
நீள அகலம் கண்டதில்லை!
மணம் வீசியதில்லை!
ஒருபோதும் மரணித்ததில்லை!
எப்போதும்
மெளனம் காட்டியதில்லை!
எவரிடத்தும் ஏற்றயிறக்கம்
பார்ப்பதில்லை!
யார் கனவுகளையும்
கலைத்ததில்லை!
கடுமையாய்
பேசியதோ! விமர்சித்ததோ இல்லை!
இடைவெளி கொடுத்ததில்லை!
இன்பத்தில்
இடையீடாய் வந்ததில்லை!
எதற்கும்
முட்டுக்கட்டை போட்டதில்லை!
செயல்படும் முன்
முடிவுகள் வகுத்ததில்லை!
பகுத்தறிவை கெடுத்ததில்லை!...
அதை...
கருப்பைத்_தாண்டி_பிறக்கும்
அதிசயம்_என்பதா?
மகிழ்வை மீறி பிறக்கும்
வீரியம் என்பதா?
உடைந்த மனதை உயிர்க்கும்
மருந்து என்பதா?
நம் காலத்தின் கண்கள்!....
அதனுள் இருந்து
ஒருபோதும்
வஞ்சகம் வெளிப்பட்டதில்லை!...
வெளிப்படுமே
என சிலர் விவாதித்தாலும்
அது
அவர்களை வஞ்சிப்பதில்லை!....
நம்மை விட்டு மட்டும்
விலகாமல்
துரத்திக் கொண்டே இருக்கிறது
கடைசிவரை!...
காலம் அல்ல.... அதன் பெயர்!...
தன்னம்பிக்கை!.....
No comments:
Post a Comment