எம்மொழியே ! செம்மொழியே !வாழி நீ ! பல்லாண்டு !
வானுயரம் கடந்தவரும்
மண் அகலம் அளந்தவரும்
கடல் ஆழம் நுழைந்தவரும்
கண்டறியாக் காலத்தே
பெண்மகளாய்ப் பிறந்தவளே !
பெரும்புகழால் நிறைந்தவளே !
ஒப்பற்ற ஒலியோடு !
முறையான வடிவோடு !
தெளிவான வரலாறு
உனக்குண்டு நானறிவேன் .....
உனக்கு,
தொண்டு செய்தலன்றி
யான் ! வேறறியேன் !
ஆதியும் அந்தமும் சோதியென உரைத்து
பாரளந்த பரந்தாமன் மீதியென விளித்து
எல்லாமும் என்பால் உளவென்று நிறைத்த
உன்னுள்ளே,
என்னுள்ளம் உறைகிறதே தீந்தமிழே !
காதலுக்குள் காமந்தனை
கனிவுடனே நிறைத்தவளே !
வீரத்தைக் கொடைக் குணத்தால்
பணிவுடனே உரைத்தவளே !
கன்னல் செந்நெல் வளமையும்
நீதான் !
எண்ணும் எழுத்தும் உரைத்ததும்
நீதான் !
அன்பினும் அறிவினும் சிறந்தவள்
நீதான் !
அறமே மறமென எமை வளர்த்ததும்
நீதான் !...
உன்னால் நானும் உயிர்ப்புடன் பிறந்து
பின்நாள் ! புகழ என்னுள் நிறைத்தேன்
பன்நாள் !எந்தன் வாழ்நாள் சிறக்க
முன்னால் நிற்கும் எந்தமிழ் நீ ! வாழி !
செழுங்கனிகள் சுளையுரித்து
செம்மையுடன் தேன் குழைத்து
தீஞ்சுவைக்கு பால் சேர்த்து
செந்நாவில் நீரூற.....
செங்கரும்பின் சுவை வார்த்து
செம்பஞ்சுக் குழம்பினைப் போல்
குழைத்துண்ணும் சுவையீனும்
தெவிட்டாது நாவினிக்கும் .....
எம்மொழியே ! செம்மொழியே !
வாழி நீ ! பல்லாண்டு !
மிகச்சிறப்பு அய்யா
ReplyDeleteநன்றிமா...
Deleteஅருமை
ReplyDeleteஅன்பின் நன்றிகள்...
DeleteSir, super great.
Deleteபெருமகிழ்வு. அன்பின் நன்றிகள்...
Deletesemaya eruku sir🤩🤩👌👌
Deleteநன்றிகள்...
DeleteAwesome Sir💋loved it
ReplyDelete