அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
𑀅𑀓𑀭 𑀫𑀼𑀢𑀮 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀆𑀢𑀺
𑀧𑀓𑀯𑀷𑁆 𑀫𑀼𑀢𑀶𑁆𑀶𑁂 𑀉𑀮𑀓𑀼.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
𑀓𑀶𑁆𑀶𑀢𑀷𑀸𑀮𑁆 𑀆𑀬 𑀧𑀬𑀷𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀯𑀸𑀮𑀶𑀺𑀯𑀷𑁆
𑀦𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑁄𑁆𑀵𑀸𑀅𑀭𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
𑀫𑀮𑀭𑁆𑀫𑀺𑀘𑁃 𑀏𑀓𑀺𑀷𑀸𑀷𑁆 𑀫𑀸𑀡𑀝𑀺 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀦𑀺𑀮𑀫𑀺𑀘𑁃 𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀯𑀸𑀭𑁆.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀇𑀮𑀸𑀷𑀝𑀺 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀬𑀸𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀇𑀮.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
𑀇𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑀭𑁆 𑀇𑀭𑀼𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑁂𑀭𑀸 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀫𑀸𑀝𑁆𑀝𑀼.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
𑀧𑁄𑁆𑀶𑀺𑀯𑀸𑀬𑀺𑀮𑁆 𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑀻𑀭𑁆 𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓
𑀦𑁂𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀯𑀸𑀭𑁆.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
𑀢𑀷𑀓𑁆𑀓𑀼𑀯𑀫𑁃 𑀇𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀫𑀷𑀓𑁆𑀓𑀯𑀮𑁃 𑀫𑀸𑀶𑁆𑀶𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
𑀅𑀶𑀯𑀸𑀵𑀺 𑀅𑀦𑁆𑀢𑀡𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑀺𑀶𑀯𑀸𑀵𑀺 𑀦𑀻𑀦𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼.
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
𑀓𑁄𑀴𑀺𑀮𑁆 𑀧𑁄𑁆𑀶𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑀼𑀡𑀫𑀺𑀮𑀯𑁂 𑀏𑁆𑀡𑁆𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀸𑀷𑁆
𑀢𑀸𑀴𑁃 𑀯𑀡𑀗𑁆𑀓𑀸𑀢𑁆 𑀢𑀮𑁃.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
𑀧𑀺𑀶𑀯𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀅𑀝𑀺𑀘𑁂𑀭𑀸 𑀢𑀸𑀭𑁆.
நல்ல பயனுள்ள முயற்சி. வாழ்த்துகள் ஐயா
ReplyDelete🤩🤩🤩👌👌👌👌
ReplyDelete💖💕🥰
ReplyDelete