Wednesday, July 8, 2020

வியப்பிலும் - விளிப்பிலும்






விளையாடிக் கொண்டிருந்த மகளை 
கொஞ்சம் சீண்டினேன்!
அச்சோ!...
என்றபடி திரும்பிக் கொண்டாள்!...

மீண்டும் சீண்டினேன் !

கோபத்துடன் சீறினாள்!

ஏம்பா!
இப்புடி பண்றீங்க
என்றவள்
முனங்கினாள்!...

"சொன்ன பேச்சைக் கேளு"-என்றேன்!

"கேட்க மாட்டேன்"-என்றாள்!

"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
  என்றேன்!
கொஞ்சமும் தாமதிக்காமல் 
கேள்வி முளைத்தது 
அவளிடமிருந்து.....

"அப்ப நீ! மந்திரவாதியா அப்பா?"
  என்று !...

சட்டென்று நிமிர்ந்த 
என் விழிகள் 
ஆழ்ந்து நின்றன 
வியப்பிலும் - விளிப்பிலும்!.....

2 comments:

கவிரா பக்கங்கள்