விளையாடிக் கொண்டிருந்த மகளை
கொஞ்சம் சீண்டினேன்!
அச்சோ!...
என்றபடி திரும்பிக் கொண்டாள்!...
மீண்டும் சீண்டினேன் !
கோபத்துடன் சீறினாள்!
ஏம்பா!
இப்புடி பண்றீங்க
என்றவள்
முனங்கினாள்!...
"சொன்ன பேச்சைக் கேளு"-என்றேன்!
"கேட்க மாட்டேன்"-என்றாள்!
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
என்றேன்!
கொஞ்சமும் தாமதிக்காமல்
கேள்வி முளைத்தது
அவளிடமிருந்து.....
"அப்ப நீ! மந்திரவாதியா அப்பா?"
என்று !...
சட்டென்று நிமிர்ந்த
என் விழிகள்
ஆழ்ந்து நின்றன
வியப்பிலும் - விளிப்பிலும்!.....
Super sir❤🤩
ReplyDeleteNice Sir...
ReplyDelete