Wednesday, July 8, 2020

பனிக்கூழ்







கொளுத்தும் கோடையில் 
பனித்துளியாய் 
உருகினாள் மகள்!

பனிக்கூழ் வேண்டி!.....

பக்கமாய் வந்து நின்றாள் !
கேட்காமலே முத்தம் தந்தாள்!
கள்ளச் சிரிப்பில் கவனம் ஈர்த்தாள்!

வேண்டுமென்றே 
வேண்டாம் என்றேன்!.....

கயல் விழிகள் சிவக்கத் தொடங்கின!
கண்ணீர்த் துளி உதிர்க்கத் தொடங்கின!
கன்னங்கள் இளைக்கத் தொடங்கின!

அதற்கு மேல்....

தாங்கவில்லை மனம்!
ஓங்கவில்லை சினம்!

அள்ளி எடுத்தேன்.....
அணைத்துக் கொடுத்தேன்!

மெல்லச் சிரித்தாள்!...

இறுதியில் 
அவள் முன் 
உருகி நின்றேன் நான்!

பனிக்கூழாய்!.....

3 comments:

கவிரா பக்கங்கள்