வகிடெடுத்து .....
உச்சிப் பிண்ணி .....
இறுகப் பற்றி
பூ வைத்து .....
வளைந்த புருவமிடை பொட்டிட்டு .....
போதாதக் குறைக்கு
இடையிடையே
குமட்டில் குத்தி .....
இதழ் மூடச் சொல்லி .....
என்
வார்த்தைகளுக்கு
முற்றுப் புள்ளியிடும் .....
என் மகளின்
கள்ளமற்ற
குழந்தைத்தனத்தில் .....
நமட்டுச் சிரிப்பில்
இன்னும்
ஆயிரமாயிரம் முறை
காணமல் போகிறது
என்
ஆண்மைக்குரிய
வயது !.....
அருமையான கவிதை ஐயா
ReplyDeleteஅன்பின் நன்றிகள்
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா ❤
ReplyDeleteபூரிப்புடன் கவிதை 👏
ReplyDeletePulavare neer palandu valga💖
ReplyDelete